உள்ளூர் செய்திகள்
போலீஸ்காரர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் சிக்கினார்
- கொலை வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- எஸ்.ஐ சித்ராவின் கள்ளக்காத லரான கமல் ராஜன் நண்பரை ஊத்தங்கரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் முன்னாள் போலீஸ்காரர் செந்தில்குமார் கொலை வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எஸ்.ஐ சித்ராவின் கள்ளக்காத லரான கமல் ராஜன் நண்பர் பாவக்கல் பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் சென்னக்கிருஷ்ணன் (வயது30) என்பவரை ஊத்தங்கரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
சென்னகிருஷ்ணனும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சென்ன கிருஷ்ணனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.