குமாரபாளையத்தில் நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதல்
- கடலை எண்ணெய் லோடு ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சேலம் கோவை புறவழிச்சாலையில் குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
- இரவில் லாரி நிற்பது தெரியாமல், எண்ணெய் லோடு லாரி கரும்பு லோடு லாரியின் மீது மோதியதில், லாரி ஓட்டுனர் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார்.
குமாரபாளையம்:
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்காட் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத்( வயது25). இவர் கடலை எண்ணெய் லோடு ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சேலம் கோவை புறவழிச்சாலையில் குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் ஓரமாக எவ்வித சிக்னலும் போடாமல் கரும்பு லோடு லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.
இரவில் லாரி நிற்பது தெரியாமல், எண்ணெய் லோடு லாரி கரும்பு லோடு லாரியின் மீது மோதியதில், லாரி ஓட்டுனர் ஸ்ரீநாத் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். லாரி பலத்த சேதமடைந்த நிலையில் ஓட்டுனரை வெளியே எடுக்க முடியாததால், குமாரபாளையம் தீயணைப்பு படையினர் நேரில் வந்து போராடி ஓட்டுனரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கரும்பு லோடு லாரியில் தூங்கி கொண்டிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சிருவன்கூர் பகுதியினை சேர்ந்த டிரைவர் செல்வம், (30)என்பவரும் காயமடைந்தார். இவரை குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.