உள்ளூர் செய்திகள்

கோவை தம்பதி மீது மேலும் ஒரு மோசடி புகார்

Published On 2023-02-12 09:12 GMT   |   Update On 2023-02-12 09:12 GMT
  • நிறைமொழி தாங்கள் அமெரிக்காவில் தொழில் தொடங்க பணம் கேட்டார்.
  • விசாரணை நடத்தி பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோவை,

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த தீபா, ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு கோவையை சேர்ந்த நிறைமொழி, அவரது மனைவி நிவேதிதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது நிறைமொழி தாங்கள் அமெரிக்காவில் தொழில் தொடங்க போவதாகவும் அதற்கு பணம் தருமாறும், அதனை உடனே தந்து விடுவதாகவும் தெரிவித்தனர்.

இதனை நம்பி நானும், எனது தம்பி பிரவீனும் அவர்களுக்கு ரூ.90 லட்சம் கொடுத்தோம். ஆனால் பணத்தை பெற்று கொண்ட பிறகு நீண்ட நாட்களாகியும் திருப்பி தரவில்லை.

இதுகுறித்து கேட்டபோது வெள்ளகிணறில் நிவேதிதா தந்தைக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான சொத்து உள்ளதாகவும், அதனை விற்று பணத்தை கொடுப்பதாகவும் தெரிவித்தனர். ஆனாலும் இதுவரை தரவில்லை. எனவே விசாரணை நடத்தி பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக நிறைமொழி, அவரது மனைவி நிவேதிதா ஆகியோர் மீது, ராமநாதபுரத்தை சேர்ந்த கேட்டரிங் நிறுவன உரிமையாளர் ஒருவர் வீட்டில் அமெரிக்க டாலர், மற்றும் நகைகள் திருடியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News