உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம் நடந்தது.

ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-07-07 08:11 GMT   |   Update On 2022-07-07 08:11 GMT
  • லக்ஷ்மி நரசிம்மரும், கோதண்டராமர் சாமியும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி உள்ளனர்.
  • புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்ஞா கணபதி, ஸ்ரீராம பாதுகா சன்னதிகளின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா ஆலங்குடி அருகே உள்ள ஞானபுரி சித்திரக்கூட சேத்திரம் ஸ்ரீசங்கரஹர மங்கல மாருதி ஆஞ்சநேய சுவாமி கோவிலில் 33 அடி உயர விஸ்வரூபமாக அருள்பாலித்து வரும் ஆஞ்சனேயர் சுவாமிக்கு அருகே ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரும், ஸ்ரீகோதண்டராமர் சுவாமியும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி உள்ளனர்.இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஆக்ஞா கணபதி, ஸ்ரீராம பாதுகா சன்னதிகளின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீவித்யா அபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த சுவாமிகள் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News