உள்ளூர் செய்திகள்
உல்லாசத்துக்கு வர மறுத்ததால் ஆத்திரம்: இளம்பெண்ணை தாக்கிய வாலிபருக்கு காப்பு
- பெண்ணிற்கு திருமணம் ஆகவே குணாவுடன் ஆன தொடர்பை துண்டித்தார்.
- பெண்ணின் வீட்டிற்கு சென்ற குணா, அவரை உல்லாசமாக இருக்க வருமாறு அழைத்தார்.
ஊத்தங்கரை,
ஊத்தங்கரை அருகே உள்ளமிட்டப்பள்ளியை சேர்ந்தவர் 22 வயது பெண். திருமணம் ஆனவர். இவருக்கும் ஊத்தங்கரை மிட்டப்பள்ளி காமராஜ் நகரை சேர்ந்த பொக்லைன் டிரைவர் குணா (23) என்பவருக்கும் இடையே பழக்கம் கடந்த 4 ஆண்டுகளாக இருந்து வந்ததுள்ளது.
இந்த நிலையில் அந்த பெண்ணிற்கு திருமணம் ஆகவே குணாவுடன் ஆன தொடர்பை துண்டித்தார். இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி இரவு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற குணா, அவரை உல்லாசமாக இருக்க வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுத்துள்ளார்.
இதனால் அவருடன் வாக்குவாதம் செய்த குணா அவரை தாக்கி மானபங்கம் செய்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் சிங்காரப்பேடடை
போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் குணாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.