உள்ளூர் செய்திகள்

கல்லிடைக்குறிச்சியில் அங்கன்வாடி பெண் ஊழியர் தற்கொலை

Published On 2022-07-04 09:08 GMT   |   Update On 2022-07-04 09:08 GMT
  • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பலவேசகுமார் இறந்துவிட்டார். பிரமாட்சி செட்டிமேடு அங்கன்வாடியில் சமையல் பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
  • கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லிடைக்குறிச்சி:

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மணிமுத்தாறு கீழ ஏர்மாள்புரம் பலவேசக்கார தெருவை சேர்ந்தவர் பலவேசகுமார். இவரது மனைவி பிரமாட்சி(வயது 35).

இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பலவேசகுமார் இறந்துவிட்டார். பிரமாட்சி செட்டிமேடு அங்கன்வாடியில் சமையல் பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன வேதனையில் பிரமாட்சி இருந்துள்ளார்.தனது மாமியார் மற்றும் குழந்தைகளுடன் தனியே வாழ்ந்து வந்த நிலையில் எப்படி குழந்தைகளை வளர்க்க போகிறேன் என மன உளைச்சலில் காணப்பட்டார்.

நேற்று யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் உத்திரத்தில் தனது சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News