உள்ளூர் செய்திகள்

அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணி

Published On 2022-11-17 15:18 IST   |   Update On 2022-11-17 15:18:00 IST
  • அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் நாகராஜ் துவக்கி வைத்தார்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்படி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் சார்பில் அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் நாகராஜ் துவக்கி வைத்தார். பேரணியில் மாணவ, மாணவிகள், உடற்கல்வி ஆசிரியர்கள், பள்ளியின் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.

பேரணி பள்ளியில் துவங்கி பேரூந்து நிலையம் வழியாக வட்டாச்சியர் அலுவலகம் வரை சென்று மீண்டும் பள்ளியில் முடிவுற்றது. பேரணியில் மாணவர்கள் ஊனம் என்பது அடையாளம் அல்ல, மாற்றத்திற்க்கான திறன் மாற்றுத்திறன் போன்ற வாசகங்களை எழுப்பி சென்றனர்.

Tags:    

Similar News