உள்ளூர் செய்திகள்

திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி பலி

Published On 2022-11-01 06:43 GMT   |   Update On 2022-11-01 06:43 GMT
  • முனியம்மாள் திருக்கோவிலூரில் உள்ள பெருமாள் கோவிலில் நடைபெறும் பஜனைக்காக சென்றார்.
  • போலீசார் விரைந்து சென்று முனியம்மாளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி:

திருவண்ணாமலை மாவட்டம், பெரும்குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது தாய் முனியம்மாள் (வயது87). இவர் திருக்கோவிலூரில் உள்ள பெருமாள் கோவிலில் நடைபெறும் பஜனைக்காக சென்றார். அப்போது அந்த பகுதியில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் முனியம்மாள் தனியாக இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக முனியம்மாள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.

அதிர்ச்சி அடைந்த அவர் உயிர்பிழைக்க கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆனால் அவர் தண்ணீரில் அடித்துசெல்லப்பட்டார். இதுகுறித்து திருக்கோ விலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல்அறிந்த போலீசார் விரைந்து சென்று முனிய ம்மாளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியபாலம் அருகே முனியம்மாள் உடல் கரை ஒதுங்கிக் கிடந்தது. உடலை கைப்ப ற்றிய போலீசார் பிரேத பரிசோ தனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருக்கோ விலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News