உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் இறந்து கிடந்த முதியவர்

Published On 2023-09-23 07:53 GMT   |   Update On 2023-09-23 07:53 GMT
  • கல்லூரிக்கு சென்ற ஊழியர்கள் வளாகத்தில் இறந்து கிடந்த முதியவர் குறித்து விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
  • விசாரணை முடிவில் முதியவர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நேற்று இரவு சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இன்று காலை கல்லூரிக்கு சென்ற ஊழியர்கள் வளாகத்தில் இறந்து கிடந்த முதியவர் குறித்து விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த விக்கிரவாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து இறந்து கிடந்த முதியவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் முதியவர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

Tags:    

Similar News