உள்ளூர் செய்திகள்

கடலூரில் கருவூல கணக்குத் துறை ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2023-11-04 07:54 GMT   |   Update On 2023-11-04 07:54 GMT
  • மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி தினந்தோறும் வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.
  • வேறு ஏதேனும் காரணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

கடலூரில் கருவூல கணக்குத் துறை ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் புதுப்பாளை யத்தை சேர்ந்தவர் அந்தோணி சகாயராஜ் (47). இவர் கடலூர் மாவட்ட கருவூல கணக்கு துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால், தனது குடும்பத்தை பிரிந்து கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி தினந்தோறும் வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை அறையில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்தோணி சகாயராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தோணி சகாய ராஜ் தூக்கு ேபாட்டு தற்ெகாலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு ஊழியர் தற்கொ லை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News