மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற காட்சி.
நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகிலேயே ஆட்டோ நிறுத்தம் அமைக்க வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் மனு
- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை கீழே தள்ளிவிட்ட நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
- பஸ் நிலையம் பணியால் கடந்த 5 ஆண்டுகளாக அங்கு ஆட்டோக்கள் நிறுத்த இடமில்லை.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
புதிய மக்கள் தமிழ் தேசம் மாநில தலைவர் செந்தூர் மகாராஜன் தலைமையில் கட்சியினர் திரண்டு வந்து அளித்த மனுவில், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராஜ கண்ணப்பனை ஒருமையில் பேசி மிரட்டும் வகையில் ராமநாதபுரத்தில் நடந்து கொண்ட நவாஸ்கனி எம்.பி., மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை கீழே தள்ளிவிட்ட நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.
இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் உடையார் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், மேலப்பாளையம் கருங்குளம் பகுதியில் சுமார் 1½ ஏக்கர் நிலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு சொந்தமான தாக உள்ளது. இதனை குறிப்பிட்ட நபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்துள்ளார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அந்த நிலத்தின் மீதான அனைத்து பயன்பாட்டையும் உடனே ரத்து செய்ய வேண்டும். கோவிலுக்கு சொந்தமான இடத்தை போர்க்கால அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
ஆட்டோ நிறுத்தம்
இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தின் மாவட்ட பொருளாளர் நம்பிராஜன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், சந்திப்பு பஸ் நிலையத்தில் கடந்த 35 ஆண்டு களாக அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் 25 உறுப்பி னர்களுடன் செயல்பட்டு வருகிறது.
பஸ் நிலையம் பணியால் கடந்த 5 ஆண்டுகளாக அங்கு ஆட்டோக்கள் நிறுத்த இடமில்லை. எனவே ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது.
எனவே பஸ் நிலைய பணி முடிவடைந்ததும் பஸ் நிலையம் அருகிலேயே அம்பேத்கர் ஆட்டோ நிறுத்தத்தை மீண்டும் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி யிருந்தனர். ராதாபுரம் தாலுகா சங்கனாபுரம் ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், தங்கள் பகுதியில் இயங்கி வரும் தார் பிளான்டி னால் பொதுமக்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதனை இயங்க தடை விதிக்க வேண்டும் என்று கூறி யிருந்தனர்.