தென்காசி அருகே அறுந்து கிடந்த மின்வயரை மிதித்த ஆட்டோ டிரைவர் பலி
- தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.
- போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி இல்லத்தார் தெருவை சேர்ந்தவர் முகமது மைதீன் (வயது48). ஆட்டோ டிரைவர்.
மின்சாரம் தாக்கியது
இந்நிலையில் முகமது மைதீன் இன்று காலை திருமலாபுரம் தோப்பு பகுதிக்கு சென்றார். தற்போது தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.
இதில் திருமலாபுரத்தில் மின்வயர் ஒன்று அறுந்து கிடந்தது. இதனை கவனிக்காத முகமது மைதீன் அதனை மிதித்ததால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அச்சன்புதூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த முகமது மைதீனுக்கு ஆமினாள் (45) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.