உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே தொழிலாளி வீட்டிற்குள் புகுந்த எறும்பு திண்ணி

Published On 2023-11-27 06:24 GMT   |   Update On 2023-11-27 06:24 GMT

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். விவசாய கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவரது வீட்டில் எறும்பு திண்ணி புகுந்துள்ளது. இதை பார்த்த பெருமாள் சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த தீயணைப்பு அலுவலர் ரமேஷ் குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எறும்பு திண்ணியை உயிருடன் பிடித்தனர். பின் அதனை வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் பிடிக்கப்பட்ட எறும்பு திண்ணியை பார்ப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் பலர் வந்து பார்த்து சென்றனர்.

Tags:    

Similar News