- காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- மாற்று சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோ கிப்பாளர்கள் சங்க தலைவர் நாகராஜன், செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
திருத்துறைப்பூண்டி நகராட்சி அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகும்.
இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் பள்ளி, கல்லூரி செல்வதற்காகவும், பணி நிமித்தமாகவும் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலை வழியாக தான் செல்கின்றனர். இந்த பாதையில் ரெயில்வே கேட்டு அமைந்துள்ளது.
இதனால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் அவ்வழியாக செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் இருந்து உழவர் சந்தை வழியாக புதிய பஸ் நிலையத்திற்கு மாற்று சாலை அமைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
அப்போது முன்னாள் நகர்மன்ற தலைவர் பாண்டி யன், திருவாரூர் மாவட்ட வரதட்சணை தடுப்புக்குழு உறுப்பினர் சங்கீதா மணிமாறன், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு குழு செயற்குழு உறுப்பினர் சாந்தி நாகராஜன், நகராட்சி உறுப்பினர்கள் ஜாகிர் உசேன், எழிலரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.