உள்ளூர் செய்திகள்

90களில் பயன்படுத்திய பிலிம்ரோல் கேமராவை வைத்து மாமல்லபுரம் புராதன சின்னங்களை படம்பிடித்த அமெரிக்க இளைஞர்

Published On 2022-12-13 12:11 GMT   |   Update On 2022-12-13 13:40 GMT
  • வெயிலுடன் இயல்பு நிலை திரும்பியதால், வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகள் வரத் துவங்கி விட்டனர்.
  • தேவையான பிலிம் ரோல்களை அமெரிக்காவில் இருந்தே அவர் கொண்டு வந்திருந்தார்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் "மாண்டஸ்" புயல் மற்றும் தொடர் மழையால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது. தற்போது வெயிலுடன் இயல்பு நிலை திரும்பியதால், வழக்கம்போல் பயணிகள் வரத் துவங்கி விட்டனர்.

அமெரிக்காவில் இருந்து மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணி தாமஸ் என்பவர் டிஜிட்டல் கேமரா, ஆன்ட்ராய்டு போன் எதுவும் பயன்படுத்தாமல் 1990களில் பயன்படுத்திய பிலிம்ரோல் கேமராவை பயன்படுத்தி புராதன சின்னங்களை படம் எடுத்தார். இங்கு பிலிம் ரோல் கிடைக்காது என்பதால் தேவையான ரோல்களை அமெரிக்காவில் இருந்தே அவர் கொண்டு வந்திருந்தார். அவருக்கு மதன் என்ற உள்ளூர் வழிகாட்டி உதவினார். பழமை மாறாத அமெரிக்க இளைஞர் தாமசை பார்த்து மற்ற பயணிகள் வியப்படைந்தனர்.

Tags:    

Similar News