ரூ. 2 லட்சம் மதிப்பிலான 'ஸ்மார்ட் கிளாஸ்" சாதனங்கள் வழங்கும் போது எடுத்த படம்
பல்லடத்தில் குறைந்த கட்டணத்தில் இயங்கும் ஆம்புலன்ஸ் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு
- முப்பெரும் விழா
- ரூ. 2 லட்சம் மதிப்பிலான 'ஸ்மார்ட் கிளாஸ்" சாதனங்கள்
பல்லடம்:
பல்லடம் ஈகை அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா, குறைந்த கட்டணத்தில் இயங்கும் ஆம்புலன்ஸ் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. ஈகை அறக்கட்டளை தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தங்கலட்சுமி நடராஜன், வாழும் கலை ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாராயணன் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் குறைந்த கட்டணத்தில் இயங்கும் ஆம்புலன்ஸ் சேவையை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜா தொடங்கி வைத்தார். பல்லடம் வடுகபாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான 'ஸ்மார்ட் கிளாஸ்" சாதனங்கள் வழங்கப்பட்டது. பொங்கலூர் பிரபஞ்ச அமைதி ஆதரவற்றோர் ஆசிரமத்திற்கு 2 லட்சம் மதிப்பிலான கட்டில், பீரோ ,மெத்தை ,மளிகை பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேலும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்களான பிஸ்கட், ரொட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஈகை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.