உள்ளூர் செய்திகள்

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாபன் கொடி அசைத்து மக்கள் பயன்பாட்டிற்காக ஆம்புலன்சை தொடங்கி வைத்தார்.


கடையநல்லூரில் காவா அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ்

Published On 2022-12-19 09:21 GMT   |   Update On 2022-12-19 09:21 GMT
  • கடையநல்லூர் காவா அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிய ஆம்புலன்ஸ் அனைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • அறக்கட்டளை தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிர்வாகிகள் சம்சுதீன், என்ஜினியர் ஹூசைன், யாகூப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடையநல்லூர்:

கடையநல்லூர் காவா அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிய ஆம்புலன்ஸ் அனைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிர்வாகிகள் சம்சுதீன், என்ஜினியர் ஹூசைன், யாகூப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளைச் செயலாளர் ஜாபர் சாதிக் வரவேற்று பேசினார்.

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாபன், கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அனிதா பாலின், கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, முன்னாள் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை ஆகியோர் கலந்து கொண்டு கொடி அசைத்து மக்கள் பயன்பாட்டிற்காக ஆம்புலன்சை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், மாவட்ட பொருளாளர் முகமது செரீப், நகர செயலாளர் அப்பாஸ், முஸ்லிம் லீக் நகர தலைவர் செய்யது மசூது, சிராஜ் மில்லத் அறக்கட்டளை கோயா, முன்னாள் நகரச் செயலாளர் முகமது அலி, நகர அவைத் தலைவர் முருகையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News