உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் வழங்கப்பட்ட போது எடுத்தபடம்.

மாதாப்பட்டணம் பள்ளிக்கு கணினி வழங்கிய முன்னாள் மாணவர்கள்

Published On 2022-09-05 09:33 GMT   |   Update On 2022-09-05 09:33 GMT
  • முன்னாள் மாணவர்கள் சார்பில் கணினி மற்றும் இலவச ஜெராக்ஸ் எந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது.
  • அன்பு கரங்கள் சார்பில் மரக்கன்றுகள் பள்ளிக்கு வழங்கப்பட்டது.

தென்காசி:

தென்காசி மாவட்டம் அடைக்கலப்பட்டணம் அருகே உள்ள மாதாப்பட்டணம் சற்குண சத்திய வித்யாலயா மேல் நிலைபள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் நடத்தும் அன்புக்கரங்கள் அறக்கட்டளை சார்பில் கணினி மற்றும் இலவச ஜெராக்ஸ் எந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் சசிகலா தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியை செல்லம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் அமிர்த சிபியா வரவேற்று பேசினார்.

நிகழ்சியில் முன்னாள் மாணவர்கள் நடத்தும் அன்பு கரங்கள் அமைப்பின் உறுப்பினர் டாக்டர் ராஜசேகர் மாணவர்கள் பள்ளியில் ஒழுக்கத்துடனும் சுயகட்டுப்பாட்டு நிறைந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்று மாணவர்களிடையே உரையாற்றினார். டாக்டர் புஷ்பலதா மாணவர்கள் ஆசிரியர்களிடம் மரியாதையோடும், கண்ணியத் தோடும் இருக்க வேண்டும் என்றும் மாணவர்கள் தங்களின் தனித்திறமையை வளர்த்துகொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் அன்பு கரங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் ஆல்பர்ட், எஸ்.ஆர் .சுப்பிரணியன், தங்கத்துரை,அருணாசலம்,வெள்ளத்துரை ஆகியோர் மாணவர்களிடையே உரைநிகழ்தினர். அறிவியல் ஆசிரியர் கலைசெல்வன் நன்றி கூறினார். முன்னதாக அன்பு கரங்கள் சார்பில் மரக்கன்றுகள் பள்ளிக்கு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News