அ.தி.மு.க. கட்சி கொடியேற்று விழா: சூளகிரிக்கு இன்று மாலை எடப்பாடி பழனிசாமி வருகை
- அ.தி.மு.க. சார்பில் கட்சி கொடியேற்று விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு சூளகிரியில் நடக்கிறது.
- விழாவில் தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.
கிருஷ்ணகிரி,
அ.தி.மு.க. கொடியேற்று விழா அ.தி.மு.க. பொன் விழா நிறைவு பெற்று 51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கட்சி கொடியேற்று விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு சூளகிரியில் நடக்கிறது.
சூளகிரி பஸ் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி தலைமை தாங்குகிறார்.
விழாவில் தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார். தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
இதனால் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க பேனர்கள், கட்சி கொடிகள் கட்டப்பட்டுள்ளது. சூளகிரியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.