வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
- முகாமில் 22 பயனாளிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் மான்ய விலையில் காய்கறி விதைகள், உரங்கள் மற்றும் பிளாஸ்டிக் டிரம், டிரே வழங்கப்பட்டது.
- வேளாண்துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு மான்ய விலையில் பாறை, மண் வெட்டி, தென்னங்கன்று உள்ளிட்ட வேளாண்மை உபகரணங்களும் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சீதளா பாலாஜி தலைமை தாங்கினார்.
திருமருகல் வட்டார தோட்டக்கலை உதவி அலுவலர் செல்லபாண்டியன், வேளாண்மை உதவி அலுவலர் சிந்து ஆகியோர் முன்னிலை வகித்து துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மான்யங்கள் பற்றி பேசினர்.இதில் 22 பயனாளிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் மான்ய விலையில் காய்கறி விதைகள், உரங்கள் மற்றும் பிளாஸ்டிக் டிரம், டிரே வழங்கப்பட்டது.வேளாண்துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு மான்ய விலையில் பாறை, மண் வெட்டி, தென்னங்கன்று உள்ளிட்ட வேளாண்மை உபகரணங்களும் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் நடராஜன், ஊராட்சி மன்றதுணை தலைவர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.