உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் போர் சங்கை மேயர் சண். ராமநாதன் தொடங்கி வைத்து ஒலிக்க செய்தார்.

தஞ்சையில், 42 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒலித்த "போர் சங்கு"

Published On 2022-08-15 10:18 GMT   |   Update On 2022-08-15 10:18 GMT
  • முற்றிலும் இரும்பு துணிகளை கொண்டு இந்த சங்கு அமைக்கப்பட்டது.
  • 1980-ம் ஆண்டுக்கு பின்னர் இந்த சங்கு ஒலிக்காததால் பராமரிப்பு இன்றி கிடந்தது.

தஞ்சாவூர்:

தஞ்சை ஆயுதப்படை மைதானம் பின்புறம் மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. தற்போது உள்ள இந்த இடத்தில் போர் சங்கு அமைந்துள்ளது. இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் அதாவது 1939 முதல் 1945-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. இந்த உலகப் போரின் போது இரவு நேரங்களில் விமானங்களால் குண்டுகள் வீசப்பட்டன. அப்போது தஞ்சை நகரம் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதற்காக விளக்குகள் அணைக்கப்படும் ‌.

இந்த விளக்குகள் அமைப்பதற்கு முன்னதாக சங்கு ஒலிக்கும். இந்த சங்கு ஒலித்த உடனே விளக்குகள் அணைக்கப்பட வேண்டும் என்பது உத்தரவு. அவ்வாறு அணைக்கப்பட்டால் நகரம் இருக்கும் இடமே தெரியாது. இந்த காரணத்திற்காக தஞ்சையில் போர் சங்கு நிறுவப்பட்டது. முற்றிலும் இரும்பு துணிகளை கொண்டு இந்த சங்கு அமைக்கப்பட்டது. மின்சாரம் உதவியுடன் இந்த சங்கு ஒலித்தது. தஞ்சை நகரம் முழுவதும் கேட்கும் வகையில் நிறுவப்பட்டது. ஆனால் 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த சங்கு ஒலிக்கவில்லை. இதனால் பராமரிப்பு இன்றி கிடந்தது.

இந்த சங்கு மீண்டும் இயக்கப்பட்டு மாநகரில் மீண்டும் சங்கு ஒலிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்புகள் மாநகராட்சி ஆணையரை சந்தித்து வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து சங்கை ஒலிக்க வைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க தொடங்கியது. அதன்படி இரும்பு தூண் மீது பொருத்தப்பட்டு இருந்த 100 கிலோ வரை எடை கொண்ட சங்கு சரி செய்யக்கூடிய பணி நடைபெற்றது. இந்த பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து முடிந்தன.

பணிகள் முடிந்ததை தொடர்ந்து சுதந்திர தின நாளாக இன்று முதல் சங்கு ஒலிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று முதல் பொற்கால சங்கு ஒலித்தது.

இதனை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் முன்னிலையில் மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார். சரியாக இன்று மதியம் 12 மணிக்கு மேயர் தொடங்கி வைத்ததும் சங்கு ஒலித்தது. தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் இந்த சங்கு ஒலித்தது.

மேலும் தஞ்சை மாவட்டத்தில் கரந்தை, புதிய பேருந்து நிலையம் நீதிமன்ற சாலை , இ.பி. அலுவலகம் அருகே என 6 இடங்களில் சங்கு நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சங்கானது தினமும் காலை 6 மணி, 9 மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி, இரவு 9 மணி 5 முறை ஒலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 42 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் போரில் ஒலித்த சங்கு ஒலித்ததால் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News