உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் நாளை நடக்க இருந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

Published On 2023-11-03 09:50 GMT   |   Update On 2023-11-03 09:50 GMT
  • கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
  • நாளை தஞ்சையில் நடக்க இருந்த பொதுக்கூட்டம் வரும் 16-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:

அ.தி.மு.க. தலைமை சார்பில் வெளியிடப்ப ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தஞ்சையில் நாளை (சனிக்கிழமை) பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுவதாக இருந்தார்.

இந்த நிலையில் தஞ்சை உட்பட டெல்டா மாவட்ட ங்களில் அடிக்கடி மழை பெய்து வருகிறது.

மேலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

எனவே நாளை தஞ்சையில் நடக்க இருந்த பொதுக்கூட்டம் வரும் 16-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

அன்றைய தினம் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News