உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் கொட்டும் மழையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-06-22 08:55 GMT   |   Update On 2023-06-22 08:55 GMT
  • அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
  • ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஊட்டி,

கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்தும் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஊட்டி ஏ.டி.சி திடலில், மாவட்ட கழக செயலாளர் கப்பசி வினோத் தலைமையில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது கனமழை பெய்தது. ஆனாலும் அ.தி.மு.க.வினர் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதில் அமைப்புச் செயலாளர் கே.ஆர்.அர்ச்சுனன், முன்னாள் எம்.எல்.ஏ சாந்திராமு, கூடலூர் எம்.எல்.ஏ பொன்.ஜெய்சீலன், மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஊட்டி நகர்மன்ற உறுப்பினர் அக்கீம்பாபு, நகர செயலாளர் சண்முகம், குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார், ஒன்றிய செயலாளர்கள் கடநாடு குமார், தப்பகம்பை கிருஷ்ணன், கோத்தகிரி வடிவேல், ஓ.சி.எஸ் தலைவர் ஜெயராமன், நொண்டிமேடு கிளை செயலாளர் கார்த்திக் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News