உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டத்தில் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., பேசிய காட்சி. அருகில் முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி உள்ளார்.

செங்கோட்டையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Published On 2023-11-24 08:58 GMT   |   Update On 2023-11-24 08:58 GMT
  • அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தலைமையில் நடைபெற்றது.
  • கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை:

செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற தலைமை நிலைய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் 25, 26-ந் தேதிகளில் நடைபெறும் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம்களில் சிறப்பாக செயலாற்றுதல் குறித்து வழங்கப்பட்ட ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகிகளுக்கு கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., எடுத்து கூறி னார்.

இதில் மாவட்ட இணை செயலாளர் சண்முகப்பிரியா, துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், மாவட்ட பொருளாளர் சண்மு கையா, முன்னாள் அண்ணா தொழிற்சங்க மண்டல செய லாளர் கந்தசாமி பாண்டியன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை நிலைய பேச்சாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News