உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஓ.எஸ்.மணியன் பேசினார்.

திருமருகலில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

Published On 2022-09-24 08:37 GMT   |   Update On 2022-09-24 08:37 GMT
  • கூட்டத்திற்கு திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
  • திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் அதிமுக சார்பில் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார்.

திட்டச்சேரி பேரூர் செயலாளர் அப்துல் பாசித், மாவட்ட துணை செயலாளர் அபுசாலி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

நாகை நகர செயலாளர் தங்க கதிரவன் வரவேற்றார்.

நாகை மாவட்ட செயலாளரும், அமைப்புச் செயலாளருமான ஓ.எஸ்.மணியன்.எம்எல்ஏ, மாநில கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் ஆசைமணி, மாவட்ட அவை தலைவர் ஜீவானந்தம், தலைமை கழக பேச்சாளர்கள் அன்பழகன், நல்லுசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

முடிவில் திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News