உள்ளூர் செய்திகள்

கலெக்டர் மகாபாரதி.

'ரேடால்' எலி மருந்து விற்பனை செய்தால் நடவடிக்கை

Published On 2023-07-13 07:05 GMT   |   Update On 2023-07-13 07:05 GMT
  • குழந்தைகள் தவறுதலாக உபயோகப்படுத்திவிடும் அபாயம் உள்ளது.
  • சூப்பர் மார்க்கெட், மருந்து கடைகளில் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

அபாயகரமான 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த "ரேடால்" என்ற மருந்தானது வீட்டில் எலிகளை கட்டுப்படுத்த பயன்படு த்தப்பட்டு வருகிறது. இதனை குழந்தைகள் தவறுதலாக உபயோக ப்படுத்தி விடும் அபாயம் உள்ளது.

இதற்கு எதிர்வினை மருந்து இல்லை. இதனால் மத்திய, மாநில அரசுகள் இதன் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை தடைசெய்துள்ளனர்.

எனவே, இந்த எலி மருந்தை மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட், மருந்து கடைகளில் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த மருந்தை எக்காரணத்துக்காகவும் வாங்க வேண்டாம். "ரேடால்" மருந்து விற்கக்கூடிய விற்பனையாளர்களை கண்டறிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்கள் மூலம், மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆய்வில் "ரேடால்" மருந்து விற்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட விற்பனை யாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், "ரேடால்" மருந்து விற்பது குறித்து பொதுமக்களுக்கு தெரியவந்தால், வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் புகார் அளிக்கலாம். தொலைபேசி எண்கள்:-

குத்தாலம்- 98945 48257, மயிலாடுதுறை- 88700 68125, செம்பனார்கோயில்- 63698 95439, சீர்காழி- 80722 20767, கொள்ளிடம்- 99944 82889 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News