உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தீபக்ஜேக்கப்

குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை

Published On 2023-07-18 10:02 GMT   |   Update On 2023-07-18 10:02 GMT
  • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 435 மனுக்கள் பெறப்பட்டது.
  • மனுக்கள் மீதான விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:-

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 435 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது .

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து அவர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான நிதி உதவி 15 நபர்களுக்கு தலா ரூ.17000-க்கான காசோலையினை வழங்கினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , வருவாய் அலுவலர் (பொ) செந்தில்குமாரி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News