உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

பொது மக்களிடம் பெறப்பட்ட 331 மனுக்கள் மீது நடவடிக்கை - கலெக்டர் ஆலிவர் தகவல்

Published On 2022-12-06 09:57 GMT   |   Update On 2022-12-06 09:57 GMT
  • பட்டா, உதவித்தொகை, குடும்ப அட்டை, கல்வி கடன் என பல கோரிக்கை மனு பெறப்பட்டது.
  • உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது :-

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் அவர் வருவாய் துறை சார்பில் ஓரத்தநாடு வட்டத்தைச் சார்ந்த 1 மாற்றுத்திறனாளிக்கு மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணையினை வழங்கினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்து அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News