உள்ளூர் செய்திகள்

ஏரிச்சாலையில் கனரக வாகனங்களால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல்.

கொடைக்கானல் ஏரிச்சாலையில் கனரக வாகனங்கள் அதிகரிப்பால் உயிர்பலி ஆபத்து

Published On 2022-07-15 05:29 GMT   |   Update On 2022-07-15 05:29 GMT
  • ஏரிச்சாலையின் இருபுறமும் கனரக வாகனங்கள் நுழையாதபடி தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டன.
  • கண்துடைப்பாக நடந்த ஏரிச்சாலை ஆக்கிரமிப்பு பல சுற்றுலா பயணிகளின் உயிர்களை காவு வாங்க காத்திருக்கிறது.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் கடந்த சில மாதங்களுக்கு முன் கோடைசீசன் தொடங்கிய போது நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிச்சாலையின் இருபுறமும் கனரக வாகனங்கள் நுழையாதபடி தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டன.

ஆனால் வாகனம் இடித்தது போல் எரிச்சாலை யின் இருபுறமும் அந்த தடுப்பு கம்பி வேலிகள் உடைந்து கிடந்தன. தற்போது ஏரிச்சாலை ப்பகுதி யில் பஸ், தண்ணீர் லாரி, அதிக நீளமும் அதிக உயரமும் கொண்ட டெம்போக்கள், வேன் ஆகிய கனரக வாகனங்கள் இரு புறங்களில் இருந்தும் வருவதால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஏற்கனவே இருபுறமும் அகற்றப்பட்ட சாலையோர கடைகள் மீண்டும் அமைக்கப்பட்டு இடையூறு ஏற்பட்டுள்ள நிலையில் கனரக வாகனங்களும் ஏரிச்சாலை பகுதியில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்பலி நிகழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு சில நேரங்களில் கனரக வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

கண்துடைப்பாக நடந்த ஏரிச்சாலை ஆக்கிரமிப்பு பல சுற்றுலா பயணிகளின் உயிர்களை காவு வாங்க காத்திருக்கிறது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சுற்றுலாப் பயணிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News