உள்ளூர் செய்திகள்

கயத்தாறு அருகே இன்று காலை விபத்து - டிராக்டர் மீது லாரி மோதி காவலாளி பலி

Published On 2023-02-16 09:14 GMT   |   Update On 2023-02-16 09:14 GMT
  • கயத்தாறு அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெயில்முத்து காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
  • கரிசல்குளம் விலக்கு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மீது லாரி பின்னால் மோதியது.

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்த வர் வெயில்முத்து (வயது 42). இவர் கயத்தாறு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

லாரி மோதல்

இந்நிலையில் இன்று காலை வெயில்முத்து டிராக்டரில் எம்சான்ட் மணல் ஏற்றிக்கொண்டு கயத்தாறு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கோவையில் இருந்து நெல்லைக்கு வந்த லாரியை வண்ணார்ப்பேட்டையை சேர்ந்த முருகன் (45) என்பவர் ஓட்டி வந்தார். கரிசல்குளம் விலக்கு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மீது லாரி பின்னால் மோதியது. இதில் டிராக்டர் கவிழ்ந்து வெயில்முத்து சம்பவ இடத்தில் பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கயத்தாறு இன்ஸ்பெ க்டர் பாஸ்கரன் சென்று பலியான வெயில்முத்து வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.உயிரிழந்த வெயில்முத்துக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

Tags:    

Similar News