உள்ளூர் செய்திகள்

வல்லப விநாயகர் ஆலயத்தில் உள்ள வள்ளி தெய்வானையுடன் கல்யாண சுப்பிரமணியர், பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகன், கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனியாண்டவர் ஆகிய சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

ஆனி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகன் கோவில்களில் அபிஷேக ஆராதனை

Published On 2022-07-06 09:17 GMT   |   Update On 2022-07-06 09:17 GMT
  • பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சஷ்டியை முன்னிட்டு முருகன் கோவில்களில் அபிஷேக நடந்தது.
  • அதைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை கல்யாண சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பரமத்தி வேலூர்:

ஆனி மாத வளர்பிறை சஷ்டியினை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகன், பரமத்தி வேலூர் தேரடி வீதியில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான வல்லப விநாயகர் ஆலயத்தில் உள்ள வள்ளி தெய்வானை உடனாகிய கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு பால் ,தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் ,தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை கல்யாண சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சிய ளித்தார். இதில் சுற்றுவ ட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் கோப்பணம் பாளையத்தில் உள்ள பாலமுருகன், நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரையில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன், திரு வேலீஸ்வரர் கோவில் உள்ள முருகன், அணிச்சம் பாளையத்தில் வேல்வடியில் உள்ள முருகன், பிலிக்கல் பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனியாண்டவர் கோவில் ,அய்யம்பாளையம் முருகன் கோவில்,ஆனங்கூர் மாரியம்மன் கோவில் உள்ள முருகன், பொத்த னூர் பச்சைமலை முருகன்,

கபிலர்மலை பாலசுப்பிர மணியசுவாமி கோவில், பாலப்பட்டி முருகன் கோவில், மோகனூர் பாலசு ப்பிரமணிய சுவாமி கோவில், சுள்ளிப்பாளையம் அருகே அருணகிரி மலையில் உள்ள அருணகிரிநாதர் மற்றும் பரமத்தி வேலூர்

சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்க ளில் ஆனி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News