உள்ளூர் செய்திகள்

ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் தேசியக்கொடி வடிவில் அலங்கரிக்கப்பட்ட தேர்.

ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய திருவிழா

Published On 2022-08-16 07:06 GMT   |   Update On 2022-08-16 07:06 GMT
  • புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் ஆண்டுப்பெரு–விழாவை ஒட்டி தேர்த்திருவிழா நடைபெற்றது.
  • தேசியக்கொடி அலங்காரத்துடன் தேர் பவனி ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூரில் 125 ஆண்டு பழமையான புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் ஆண்டுப்பெரு–விழாவை ஒட்டி தேர்த்திருவிழா நடைபெற்றது.

பங்குத் தந்தை கிரகோரி–ராஜன் தலைமையில் ஆலய தேரினை முன்னாள் ஆயர் சிங்கராயன் கலந்து கொண்டு ஆண்டுப்பெருவிழா திருப்பலி நிறைவேற்றி மற்றும் தேர் பவனியை தொடங்கி வைத்தார்கள். ஜெயராக்கினி மாதா தேரானது ஆத்தூரின் முக்கிய வீதிகளின் வழியே பவனியாக சென்றது.முன்னதாக மாதாவின் தேரானது தேசிய கொடியின் வடிவில் மூவர்ணத்தில் அலங்கரிக்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் ரெமோ மற்றும் பிரான்சிஸ் தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர்.இவ்விழா–வில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்,

Tags:    

Similar News