உள்ளூர் செய்திகள்
குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த ஆம் ஆத்மி வேண்டுகோள்
- கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன.
- காவல் நிலையங்களில் போதுமான அளவு காவலா்களை பணியில் அமா்த்தி குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் டி.சரவணன் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: - திருப்பூா் மாநகரில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் போதுமான அளவு காவலா்கள் இல்லாததும் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு ஒரு காரணமாகும். ஆகவே, மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் போதுமான அளவு காவலா்களை பணியில் அமா்த்தி குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.