உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2022-11-23 07:13 GMT   |   Update On 2022-11-23 07:13 GMT
  • சந்தேகத்திற்கு இடமாக அங்கு நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
  • ரூ. 25,000 மதிப்புள்ள ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடலூர்:

சிதம்பரம் அருகே அம்பேத்கர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் பேரில் அண்ணாமலை நகர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக அங்கு நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது இவர் அதேபகுதியைச் சேர்ந்த அருண்குமார் (வயது 25) என்பதும் இவரிடமிருந்து ரூ. 25,000 மதிப்புள்ள ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.

Tags:    

Similar News