உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே பெண்ணை மாணபங்கம் படுத்திய வாலிபர் கைது

Published On 2022-12-01 09:11 GMT   |   Update On 2022-12-01 09:11 GMT
  • கடலூர் அருகே பெண்ணை மாணபங்கம் படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • இது சம்பந்தமாக கமலா ராஜேந்திரனிடம் தட்டி கேட்டார்.

கடலூர்:

கடலூரை அடுத்த சாத்த மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கமலா (வயது 32). சம்பவத்தன்று இவரது வீட்டு முன்பு அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் குப்பை யைக் கொட்டியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கமலா ராஜேந்திரனிடம் தட்டி கேட்டார். அப்போது ராஜேந்திரன் கமலாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து நடுவீரப்பட்டு போலீசில் கமலா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.

Tags:    

Similar News