உள்ளூர் செய்திகள் (District)
பெரியகுளத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
- படுகாயம் அடைந்தவரை பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பெரியகுளம்:
பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் ஆசிக்அகமது (வயது26). இவருடைய மனைவி ஆப்ரின் (25). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மாமனார் வீட்டில் தங்கி கேட்டரிங் சர்வீசில் சமையல் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டு மாடியில் பாத்திரங்களை வைக்க சென்றபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த ஆசிக்அகமதுவை பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து தென்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.