உள்ளூர் செய்திகள்
திருமணம் ஆகாத ஏக்கத்தில் உயிரை மாய்த்த இளம்பெண்
- பல வருடங்களாக முயற்சித்தும் கைகூடவில்லை
- கிரிஜா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி ஜவகர் நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் கிரிஜா (வயது 29).
இவருக்கு திருமணம் செய்து வைக்க பல வருடங்களாக முயற்சித்தும் கைகூடவில்லை என்று தெரிகிறது.
இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த கிரிஜா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சீனிவாசன் தந்த புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.