உள்ளூர் செய்திகள்

சேலம் செவ்வாய்ப்பேட்டையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-11-28 13:10 IST   |   Update On 2022-11-28 13:10:00 IST
  • காய்கறி வியாபாரி. இவரது மனைவி மணிமேகலை (வயது 31). தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
  • இதில் மனம் உடைந்த மணிமேகலை, வீட்டின் அறைக்குள் சென்று தூக்கு போட்டுக் கொண்டார்.

சேலம்:

சேலம் செவ்வாய்ப் பேட்டை குப்புசாமி தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். காய்கறி வியாபாரி. இவரது மனைவி மணிமேகலை (வயது 31). தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று வழக்கம்போல், அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த மணிமேகலை, வீட்டின் அறைக்குள் சென்று தூக்கு போட்டுக் கொண்டார்.

வெகுநேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த ரவிக்குமார், ஜன்னல் வழியாக பார்த்தபோது மணிமேகலை தூக்கில் தொங்கி உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சிய டைந்தார்.

இதை யடுத்து ரவிக்குமார், கதவை திறந்து உள்ளே சென்று மணி மேகலையை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து செவ்வாய்ப் பேட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News