உள்ளூர் செய்திகள்

மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர்

Published On 2023-02-09 09:27 GMT   |   Update On 2023-02-09 09:27 GMT
  • சரியாகி விடும் என நம்பிகை தெரிவித்தனர்.
  • கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை,

கோவை போத்தனூரை சேர்ந்தவர் ஆசிம் (வயது 28). இவர் கோவை மேற்கு அைனத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கும் சிவகங்கையை சேர்ந்த வசீம் அக்ரம் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது எனது பெற்றோர் 50 பவுன் தங்க நகைகள், பாத்திரங்கள் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்தனர்.திருமணமான 2 நாட்களுக்கு பிறகு எனது கணவர் என்னிடம் சரியாக பேசாமல் இருந்து வந்தார். இதுகுறித்து நான் எனது மாமனார்- மாமியாரிடம் கூறினேன். அதற்கு அவர்கள் எல்லாம் சரியாகி விடும் என நம்பிகை தெரிவித்தனர்.

இந்த நிலையில் எனது கணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதனை பற்றி நான் கேட்டால் சரியாக பதில் கூறாமல் இருந்து வருகின்றனர்.இதனால் நான் கடந்த சில நாட்களாக மனவேதனை அடைந்து வருகிறேன். எனவே விவாகரத்து வாங்காமலும், எனக்கு தெரியாமலும் 2-வது திருமணம் செய்து கொண்ட எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து போலீசார் வசீம் அக்ரம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News