உள்ளூர் செய்திகள்

சேலம் தொண்டு இல்லத்தில் இருந்த இளம்பெண் திடீர் சாவு

Published On 2023-03-26 14:27 IST   |   Update On 2023-03-26 14:27:00 IST
  • இலக்கியா (வயது 24). மனநலம் பாதிக்கப்பட்ட இவரை இவரது பெற்றோர் சேலம் கன்னங்குறிச்சி பகுதி யில் உள்ள ஒரு தொண்டு இல்லத்தில் சேர்த்து விட்டனர்.
  • மேலும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

சேலம்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள லக்கம்பட்டி அடுத்த நீதிபு ரம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் இலக்கியா (வயது 24). மனநலம் பாதிக்கப்பட்ட இவரை இவரது பெற்றோர் சேலம் கன்னங்குறிச்சி பகுதி யில் உள்ள ஒரு தொண்டு இல்லத்தில் சேர்த்து விட்ட னர்.மேலும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ள்ளது. அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்கிய இலக்கியா நேற்று காலை வெகு நேரம் ஆகியும் எழுந்திருக்க வில்லை, இதை அறிந்த தொண்டு இல்ல நிர்வாகிகள் உடனடியாக இலக்கியவை மீட்டு சேலம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இலக்கியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தொண்டு நிறுவன அலுவலர் மாலதி கொடுத்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News