உள்ளூர் செய்திகள்

இளம்பெண் கற்பழித்து கொலை

Published On 2023-01-28 09:40 GMT   |   Update On 2023-01-28 09:40 GMT
  • கரையோர பகுதியில் உள்ள பாறையின் மீது பிரியங்கா பிணமாக கிடந்தார்.
  • பாலியல் பலாத்தாரம் செய்து கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் நெரிகம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி. இவரது மகள் பிரியங்கா (வயது 22).

மாற்று திறனாளியான இவர் ஒசூர் தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இன்று அதிகாலை கும்பளம்-வேப்பனப்பள்ளி இடையிலான ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள பாறையின் மீது பிரியங்கா பிணமாக கிடந்தார்.

இதை அறிந்த பொதுமக்கள் பேரிகை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சிலர் சேர்ந்து பிரியங்காவை பாலியல் பலாத்தாரம் செய்து கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக முதுகுறுக்கியை சேர்ந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News