உள்ளூர் செய்திகள்
- கடந்த 24ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் திடீரென மாயமானார்.
- பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர்.
கடலூர்:
பண்ருட்டி எல்.ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் கோபால் இவரது மகள் சரண்யா (வயது 20). இவர் கடந்த 24ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் திடீரென மாயமானார். இவரை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். இவரை பாளையம் தர்கா கோவில் தெருவை சேர்ந்த சூர்யா (20) கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.