உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி சிப்காட்டில் தனியார் நிறுவனத்தில் 30 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து பலி

Published On 2023-06-18 13:52 IST   |   Update On 2023-06-18 13:52:00 IST
  • ராஜ்குமார் தூத்துக்குடி கே.வி.கே நகரை சேர்ந்த மாரிசெல்வம் மற்றும் முத்துகுமார் ஆகியோருடன் சிப்காட் வளாகத்தின் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றனர்.
  • இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அவரது தாய் பேச்சியம்மன் (68) சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி அண்ணா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30). தூத்துக்குடி கே.வி.கே நகரை சேர்ந்த மாரிசெல்வம் மற்றும் முத்துகுமார் ஆகியோருடன் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தின் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றனர்.

அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் போது 30 அடி உயரத்தில் இருந்து சீட்டு உடைந்து ராஜ்குமார் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு இருந்த டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அவரது தாய் பேச்சியம்மன் (68) சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் சிப்காட்டில் உள்ள நிறுவனத்தில் 30 அடி உயரத்தில் பழைய மேற்கூறைகளை அகற்றி புதிததாக மற்றும் பணியில் எனது மகன் ராஜ்குமார் நண்பர்களுடன் ஈடுபட்டி ருந்த போது பாதுகாப்பு உபகரணங்களான ஏணி, ஹெல்மட், ரோப் ஆகியவற்றை கேட்டுள்ளார். அதற்கு நிறுவனத்தினர் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் கிடையாது, விருப்பம் இருந்தால் வேலை செய்யும் படி கூறியுள்ளனர்.

குடும்ப சூழ்நிலை காரண மாக எனது மகனும் மற்றும் 2 நபர்களும் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இல்லாமல் 30 அடி உயரத்தில் வேலை செய்துள் ளார்கள்.அப்போது எனது மகன் சீட் உடைந்து கீழே விழுந்து இறந்துள்ளார். எனவே சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் மீது நடவடி க்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.

இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News