உள்ளூர் செய்திகள்

கோவையில் பிடிபட்ட வெள்ளை நிற நாகப்பாம்பு

Published On 2023-05-04 09:16 GMT   |   Update On 2023-05-04 09:16 GMT
  • சுமார் 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது.
  • வன ஆர்வலர்கள் பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

கவுண்டம்பாளையம்,

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கோவை குறிச்சி சக்தி நகர் பகுதியில் மிகவும் அரிதாக பார்க்கப்படும் வெள்ளை நிறமுடைய சுமார் 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு மழை வெள்ளத்தில் எங்கிருந்தோ அடித்து வரப்பட்டுள்ளது.

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த வன ஆர்வலர்கள் பாம்பை பத்திரமாக மீட்டு மாங்கரை வனப்பகுதிக்குள் பத்திரமாக விடுவித்தனர்.

வெள்ளை நிறத்தில் காணப்படும் அந்த பாம்பை வெள்ளை நாகம் என பொதுமக்கள் பலரும் கூறிய நிலையில் வன ஆர்வலர் அது மரபணு பிரச்சனையால் தோல் நிறமி குறைபாடு காரணமாக இவ்வாறு தோற்றமளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது போன்று தோல் நிறமி குறைபாடுடன் காணப்படும் வெள்ளை நாகபாம்புகள் மிகவும் அரிதானது எனவும் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News