உள்ளூர் செய்திகள்
விக்கிரவாண்டியில் லாரி மோதி காய்கறி வியாபாரி சாவு
- கடந்த 19-ந்தேதி மார்க்கெட்டில் காய்கறி விற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
- இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம்:
விக்கிரவாண்ட அடுத்த வி.சாத்தனுரை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 55). இவர் விக்கிவாண்டி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த 19-ந்தேதி மார்க்கெட்டில் காய்கறி விற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அவர் விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் சாலையில் திரும்பினார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.