உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே தாய்பால் குடித்த 2 மாத குழந்தைமூச்சு திணறி பலி

Published On 2022-12-25 13:46 IST   |   Update On 2022-12-25 13:46:00 IST
  • ராஜ்குமார் மணிநகர் அரசு மதுபான கடையில் சேல்ஸ்மேனாக வேலைசெய்துவருகிறார்.
  • குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டினார். அப்போது குழந்தைக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது.

கடலூர்:

பண்ருட்டி அருகே புதுப்பேட்டை பக்கிரிபாளையம் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் பண்ருட்டி மணிநகர் அரசு மதுபான கடையில் சேல்ஸ்மேனாக வேலைசெய்துவருகிறார். இவருக்கு கடந்த ஆண்டுதிருமணம்நடந்தது. 2 மாதத்திற்கு முன்பு இவருக்கு அழகிய ஆண்குழந்தை பிறந்தது. இவரது மனைவி குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டினார். அப்போது குழந்தைக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. குழந்தையை கடலூர்அ ரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் குழந்தையைபரிசோதித்தமருத்துவர்கள் குழந்தை முன்பே இறந்து விட்டதாக தெரிவித்து விட்டனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Tags:    

Similar News