உள்ளூர் செய்திகள்

சாலையில் விழுந்த மரத்தை ஊழியர்கள் அப்புறப்படுத்தும் காட்சி.

பெரும்பாறை அருகே இன்று மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-08-13 12:20 IST   |   Update On 2023-08-13 12:20:00 IST
  • பெரும்பாறை அருகே வத்தலக்குண்டு- தாண்டிக்குடி மலைபாதையில் உள்ள தீனிக்கோடு- இந்திராநகர் இடையே இன்று காலை சுமார் 4.30 மணி அளவில் தனியார் தோட்டத்தில் இலவம் பஞ்சு மரம் தார் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்து விழுந்தது.
  • மரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பண்ணைக்காடு, கே.சி.பட்டி உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் காற்றும் சுழன்று வீசி வருகிறது. நேற்று மாலை தீனிக்கோடு, இந்திராநகர், கானல்காடு பகுதியில் காற்றுடன் மழை பெய்தது.

பெரும்பாறை அருகே வத்தலக்குண்டு- தாண்டிக்குடி மலைபாதையில் உள்ள தீனிக்கோடு- இந்திராநகர் இடையே இன்று காலை சுமார் 4.30 மணி அளவில் தனியார் தோட்டத்தில் இலவம் பஞ்சு மரம் தார் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் சாலையின் இருபுறமும் பஸ், லாரி, கார் போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றது.

மேலும் மின் கம்பி அறுந்து விழுந்ததால் தீனிக்கோடு, இந்திராநகர், கானல்காடு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தாண்டிக்குடி போலீஸ் ஏட்டு செந்தில்குமார் விரைந்து சென்று அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் அறுவை எந்திரம் மூலம் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து தொடங்கியது. மரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News