உள்ளூர் செய்திகள்
மரத்தை அகற்றும் பணி நடைபெற்றது.
பெரும்பாறை அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
- சாலையின் இருபுறமும் பஸ், லாரி, கார் போன்ற வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
- மரத்தை அறுவை இயந்திரம் மூலம் அறுத்து அப்புறப்படுத்தினர்.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள மூலக்கடைக்கும் இஞ்சோடைக்கும் இடையே இன்று காலை சாலைக்கு மேல்புறம் தனியார் தோட்டத்தில் உள்ள இலவம் பஞ்சு மரம் தார் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்து விழுந்தது.
இதனால் சாலையின் இருபுறமும் பஸ், லாரி, கார் போன்ற வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் மின் கம்பி அறுந்தது. இதனால் புல்லாவெளி, மீனாட்சி ஊத்து பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. மாவட்ட விவசாயத் தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஜெயராஜ், முன்னாள் மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜன் ஆகியோர் தலைமையில் மரத்தை அறுவை இயந்திரம் மூலம் அறுத்து அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து தொடங்கின. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.