உள்ளூர் செய்திகள்

சின்னராசு

சேத்தியாத்தோப்பு அருகே புதியதாக அமைக்கப்படும் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி

Published On 2023-07-30 15:07 IST   |   Update On 2023-07-30 15:07:00 IST
  • கிளாக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு என்கிற தெய்வகணேசன்
  • இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடலூர்:

சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கிளாக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு என்கிற தெய்வகணேசன் (வயது 32). ஆந்திராவில் தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரது மனைவி மற்றும் குழந்தை ஆதனூரில் உள்ள, பெற்றோர் வீட்டில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் ஆந்திரா வில் இருந்து விடுமுறை யில் சின்னராசு கிளாக்காட்டிற்கு இன்று விடியற்காலை வந்தார். வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஆதனூருக்கு சென்றார். இவர் புதியதாக அமைக்கப்பட்டு வரும் நெடுஞ்சாலை வழியாக ஆதனூருக்கு இன்று அதிகாலை 5 மணியளவில் சென்றார்.

அப்போது நெடுஞ்சாலை பணிகளுக்காக கொட்டி வைக்கப்பட்டிருந்த மணல் மேட்டில் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே சின்னராசு பலியானார். அங்கு வேலை செய்தவர்கள் இது தொடர்பாக சேத்தி யாத்தோப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சின்னராசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News