உள்ளூர் செய்திகள்
தனியார் பாரில் மது குடித்த வாலிபர் திடீர் சாவு
- மனைவியுடன் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தவர்
- பெரியநாயக்கன்பாளையம்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள ராவூத்து கோலனுரை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 32). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றார். இதனால் ஆறுச்சாமி தனியாக வசித்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கிளப் பாரில் மது குடிப்பதற்காக சென்றார். மது குடித்து கொண்டு இருந்த போது திடீரென மயங்கி இறந்தார். இதனை பார்த்த பார் ஊழியர்கள் இது குறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த ஆறுச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.